கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள்
பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால். பட்டினத்தார்
எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார் பாருங்கள்! பட்டினத்தார். ஞானம் அடைய நமக்கு வழி கூறுகிறார். கண்ணால்தான் சாதனை புரிந்து ஞானம் அடையவேண்டும். இதை நெஞ்சே நீ அறிவாயாக என்கிறார். ஆனால் நீ அதை விடுத்து மாயை வசப்பட்டு வேண்டாதெல்லாம் எண்ணுகிறாய் என கூறுகிறார். மேலும் கண் மூலம் சாதனை செய்து
தான் தன்னையும் உணரவேண்டும் என்றும் அதன் மூலம் உன் ஊன உடல் பத்தரை மாற்று பொன்னாக ஒளிர் விட்டு பிரகாசிக்கும் என்று கூறியுள்ளார்.
பக்கம் 107.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
www.vallalyaar.com
No comments:
Post a Comment