Monday, 15 December 2014

உணர்ந்தால் கிட்டும் பேரின்பமே

குழந்தையாக கண்டால் வாலையை பணிந்தால் நம் துர் குணங்கள்
நீங்கி ஞானம் பெறலாம்! குழந்தை தாய்! தாயே குழந்தையாக,
கன்னியாகுமரியிலே வாலை! கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள்
குழந்தை தாய்!

குமரகுருபர் கூப்பிட ஓடோடி குழந்தையாக வந்து அருள் புரிந்தால்
மதுரையிலே வாலை மீனாட்சியாக!

மும்மூர்த்திகளுக்கும் குழந்தையாகவே காட்சி தந்து அருள் பாலித்தாள் காஞ்சியிலே
வாலை காமாட்சியாக!

திருசெந்தூரிலே பாலா - பாலசுப்பிமணியமாகவும்

குரு வாயுரிலே பாலா - பால கிருஷ்ணனாகவும் விளங்கும் வாலை
கன்னியாகுமரியிலே பாலா திரிபுர சுந்தரியாக பாலா பரமேஸ்வரியாக
பாலவாக ஆறு வயது குழந்தையாக நின்று அருள் பாலிக்கிறாள்!

கண்டவர் மனக்குளிர கண்ணிலே நின்றருளும் கன்னியாகுமரி பணிந்தால்
பார்த்தால் உணர்ந்தால் கிட்டும் பேரின்பமே - முக்தியே!

Sunday, 14 December 2014

ஆதி சக்தி - வாலை

கன்னியாகுமரிக்கு அழைத்து ஆட்கொண்டு அருளி, தங்க ஜோதி ஞான சபையும்  தந்து ஞான உபதேசம் ஞான தீட்சை நாடி வருபவருக்கு தர வைத்து காத்தும் தன் திருவடி தாமரை யில் வைத்து இருக்கிறாள் வாலை !


சித்தர்களுக்கெல்லாம் சித்தர் காக புசுண்டரால்  கன்னியாகுமரி பாடப்பட்ட
புண்ணிய ஸ்தலம்.

பரசுராமரால் பாடப்பட்டது - புராணம் கூறுகிறது 

அசுரர்களை அழிக்க உக்கிரமாகும் தாய் ஆதி சக்தி, ஞானிகளுக்கு அருள குழந்தையாக வருகிறாள்!  ஞானிகள் இயல்பில் குழந்தையாகி விடுவதால் தானோ, என்னவோ  அந்த ஆதி சக்தியும் குழந்தையாக வாலையாக பாலா திரிபுரசுந்தரியாக கன்னிகா பரமேஸ்வரியாக கன்னிகா காம ஷேத்திரம் என்று அழைக்கப்படும் கன்னியா குமரி ஊரில் கன்னியாகுமரி பகவதி அம்மனாக நின்றருள்கிறாள் !51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

சித்தர்கள் போற்றும் வாலையென்பர். இந்த கன்னியாகுமரியையே! வாலையை வணங்காத சித்தன் இல்லை என்பது ஆன்றோர் மொழியே!

இன்றும் சித்தர்கள் எல்லாம் சூட்சுமமாக கன்னியாகுமரி யான வாலையை வந்து வணங்கி செல்வதாக ஐதீகம்.

ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி பாடிப்பரவினார் வாலையை போற்றியே !

குமாரகுருபருக்கு குழந்தையாக வாலையாக காட்சி தந்து அருள்கிறாள் மதுரை மீனாட்சி! ஊர் மாறி பேர் மாறி நின்றாலும் எங்கும் விளங்கும் ஆதி சக்தியே அது என உணர்ந்தாலே உண்மை ஞானம் தெளியும்.

தாயிட் சிறந்த கோயிலுமில்லை - எதனால் இதை ஞானிகள் கூறியிருப்பார்! வாலை - ஆதி சக்தி கோயில் கொண்ட கோயிலே சிறந்த கோயிலாம்!  ஏன் இப்படி பொருள் கொள்ள கூடாது? எல்லாமே தாயின் கோயில் தான் காமாட்சியும் மீனாட்சியும் விசாலாட்சியும் அபிராமியும்
கன்னியாகுமரியும் காந்திமதியும்  கற்பகாம்பாளும் ஒன்று தான்!! கன்னியாகவே குமரியாகவே குழந்தையாகவே கோவில் கொண்டு இருக்கிறாள். கன்னியாகுமரியிலே!

அதுதான் சிறப்பு ! மற்றெங்கும் சிவமும் சக்தியுமாக தானே காட்சி! கன்னியாகுமரியிலோ சக்திமயம்! வாலை மட்டுமே ! ஆதி சக்தியே! அகில லோக அன்னை மட்டுமே!

கன்னியாகுமரியில் பால சௌந்தரி தியாக சௌந்தரி என இரு தோழியர்
சூழ வாலை மட்டுமே கோவில் கொண்டுள்ளாள்! இதுவே கன்னியகுமரியின்  சிறப்பு! தனிக்காட்டு ராணி !