Tuesday, 16 September 2014

வள்ளல் பெருமான் உங்களுள் பிரவேசிக்க !!

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்! "இப்போது யாம் இங்கிருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்" என மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டு கொள்ளுமுன்  கூறியருளினார்!

இதன் அர்த்தம் என்ன? யார் தீட்சை பெறுகிறாரோ ஞான
சற்குருவிடம் வருகிறாரோ, அவர் கண் வழி , தீட்சையின் மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே
தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன் !  இரு பிறப்பாளன்! மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின் கூடவே துணையாக இருந்து காத்தருள்வார்! ஞானம் பெற வழி காட்டுவார்! கர்மங்களை தீர்த்து ஞானியாக்கியருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுள்
பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான குருவை
சந்தித்து சரணடைக!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Sunday, 14 September 2014

சும்மா இருக்கும் சுகம்

சும்மா இருக்கத்தான் ஒவ்வொருவரும் படாத பாடு படுகிறார்கள்!
மந்திரம் ஓதுகிறான்! யாகம் வளர்க்கிறான்! யோகம் செய்கிறான்!
இவையெல்லாம் அற்ப பலன்களையே தரும்! ஞான சாதனையான
சும்மா இருக்கும் கலையை சற்குரு மூலமாக திருவடி தீட்சை
பெற்று உணர்ந்து தவம் செய்பவனே இறைவனை அடைவான்!
பேரின்பம் பெறுவான்!

பீரப்பா நமக்குத்தரும் நல் உபதேசம் 'சும்மா இரு" என்பதே!

ஆறாயிரம் அருட்பாக்களை பாடிஅருளிய திருவருட் பிரகாச
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் முதல்  பாடல் என்ன தெரியுமா?

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது
மற்றொண்டு வருமோ அறியேன் எங்கோவே
துன்றுமல வெம்மாயையற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்

சுகம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
ஞானம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
கடவுளை காணவேண்டுமா சும்மா இரு!

தாயுமான சாமிகள் இரவுபகலாக விடாது கண்ணின் மணியில்
ஒளியை-இறைவனை கண்டு தொழும் தவ சீலர்களே
நாம் கும்பிடும் கடவுள் என சாதனை செய்பவர்களையே மிக மிக உயர்வாக
கூறுகிறார். இந்த உண்மை ஞானத்தை பல கோடியில் ஒருவரே உணர்கிறார்.
அப்படிபட்டவரே நாம் கும்பிடும் கடவுள் என்றால் அது மிகை இல்லை.

பீரப்பா = மெய்பொருள்

ஏட்டி  லடங்காப் பொருளே யெனதிரு கண்மணியே!
எண்சாணுக்குள் நின்றருள் வா யெனதிரு கண்மணியே
என்றன் மனக்கண் திறந்தருள்வா என்றன் கண்மணியே

யாராலும் சொல்லி எழுதி உரைக்க முடியாத அளவு மகிமை பொருந்தியது "பொருளே " எனது இரு கண்மணியே என்கிறார் பீரப்பா!!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்